திருப்பூர், டிச.30 - திருப்பூரில் 17 ஆவது கட்டட கட்டு மான பொருட்கள் கண்காட்சி ’கான்ஸ்ட்ரோ மெகா’ துவக்க விழா வெள்ளியன்று நடைபெற்றது. திருப்பூரில் 17 ஆவது கட்டட கட்டு மான பொருட்கள் கண்காட்சி டிசம்பர் 30, 31, ஜனவரி 1, 2 ஆகிய 4 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திருப் பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடைபெறு கிறது. திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் எஸ்.ஸ்டா லின் பாரதி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கண் காட்சி அரங்கை திறந்து வைத்தார். பொறியியல் பொக்கிஷம் விழா மலரை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் வெளியிட்டார். முன்னாள் தலைவர் பொறியாளர் வி.மணிகண்டன் பெற்றுக் கொண்டார். 2023 ஆம் ஆண்டு நாள்காட்டி மற்றும் நாள் குறிப்பேட்டை திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார் வெளியிட்டார். உடனடி முன்னாள் தலைவர் பொறியாளர் பி. கே.முரளி பெற்றுக் கொண்டார். நாள் குறிப்பேடுடை முன்னாள் மாநில தலை வர் சி.தில்லைராஜன் பெற்றுக் கொண் டார். ஆயுட்கால உறுப்பினர் சான்றி தழை முன்னாள் மாநில பொருளாளர் பொறியாளர் கே.ஏ.எஸ்.ரமேஷ் குமார் பெற்றுக்கொண்டார். இந்த கண்காட்சியில் செங்கல், கம்பி, சிமெண்ட், ரெடிமேட் கான்கிரீட் நிறுவனங்கள், கதவு மற்றும் ஜன்னல் வகைகள், டைல்ஸ், கிரானைட், மார் பிள்ஸ், எலக்ட்ரானிக்கல் என இன்னும் பல பொருட்களைக் கொண்ட 200 நிறுவ னங்கள் தனது கடைகளை கண்காட்சி அரங்கில் அமைத்துள்ளார்கள். இந்த கண்காட்சிக்கான ஏற்பாடு களை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் எஸ்.ஜெயராமன், கண் காட்சி துணைச் செயலாளர் எஸ்.ராஜசே கரன், கண்காட்சி துணைப் பொருளா ளர் பொறியாளர் டி.மகேஷ்குமார், கண் காட்சி தகவல் தொடர்பாளர் பொறி யாளர் எஸ்.நாகராஜ், கண்காட்சி மலர் குழு தலைவர் பொறியாளர் எஸ்.சம்பத் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.